Thursday, May 27, 2021

பங்குச் சந்தை

 



பங்குச் சந்தை என்பது தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை அதிகரிக்கும் மிக முக்கியமான வழிமுறையாகும்.  இது சந்தையில் தொழில் நிறுவனத்தின்   பங்குகளை விற்று கூடுதல் முதலீட்டை பெற வழிவகுக்கிறது. பங்கு வர்த்தகம் நாட்டின்  பொருளாதார நடவடிக்கையின் மாற்றங்களின் முக்கிய பங்கு வகிக்கிறது. உண்மையில் பங்குச் சந்தை  ஒரு நாட்டின் பொருளாதார வலிமை மற்றும் வளர்ச்சியின் முக்கிய குறியீடாக கருதப்படும். சந்தையின் நடைமுறை பங்குகளை  எளிதாக வாங்க மற்றும் விற்க நமக்கு உதவுகிறது.


பங்குச் சந்தையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 

 

  • முதல் நிலை பங்குச் சந்தை (Primary Market)
  • இரண்டாம் நிலை பங்குச் சந்தை (Secondary Market)

முதல் நிலை பங்குச் சந்தை (Primary Market)

ஒரு தொழில் நிறுவனம் நேரடியாகப் பங்குகளை வெளியிடுவதற்கு முதல் நிலை பங்குச் சந்தை என்று பெயர்.   அந்த தொழில் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஆன்லைன் மூலம் முகவர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். அவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு, பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதை  Initial Public Offer- IPO எனப்படும்.

இரண்டாம் நிலை பங்குச் சந்தை

முதன்மைச் சந்தையில் பங்குகளை வாங்கியவர்கள், தம் பங்குகளை விற்கவோ,  வாங்கவோ  இரண்டாம் நிலைப் பங்குச் சந்தை பயன்படும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை  மட்டுமே வாங்கவோ விற்கவோ இயலும். பரிவர்த்தனை செய்ய விரும்புபவர், சந்தை நிலவரத்திற்கேற்ற விலையைக் கொடுத்து பங்குகளை வாங்கவோ, அல்லது விலையைப் பெற்றுக்கொண்டு விற்கவோ செய்வார்.

ஒரு  நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர் நிறுவனத்தின் லாபத்தைப் பொறுத்து ஈவுத்தொகை (Dividend) கிடைக்கும். தேவையான பொழுது, தரகர்கள் மூலமாக, பங்குகளை விற்றுப் பணமாக்கிக் கொள்ளவும் செய்யலாம்.

பங்கு முகவர்கள்  (Stock Brokers):

பங்குச் சந்தையில், பங்குகளை நேரடியாக வாங்கவோ விற்கவோ முடியாது. அதற்கென உள்ள, பங்குச் சந்தையின் உரிமம் பெற்ற முகவர்கள் மூலமாகவே பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். பங்குச் சந்தையில் முதலீடு செய்யவோ, பரிவர்த்தனை (Trading) செய்யவோ விரும்புபவர்களிம் இத்தகைய முகவர்களிடம் இருவிதமான கணக்குகளைத் தொடங்க வேண்டும்.

இருவிதமான கணக்குகள்

(1) DEMAT Account

 (2) TRADING Account.

Demat Account

வங்கிகளில் நாம் பணத்தை வரவு செலவு செய்வது போல, நாம் வாங்கும்/விற்கும் பங்குகளின் வரவு செலவைப் பராமரிக்க, முகவர்களிடம் நாம் தொடங்கும் கணக்கே 'டீ-மேட்' கணக்கு ஆகும்.  பங்குகள் Electronic Format ல் இருக்கும். இதனால், பரிவர்த்தனைக்கான காலம் மிகக்குறைவதோடு, வீட்டில் இருந்தவாறே பரிவர்த்தனை செய்யவும் இயலுகிறது.

Demat Account தொடங்க, (இந்தியாவில்), வருமான வரி எண் (Permanent Account Number) கண்டிப்பாகத் தேவை. வங்கிக் கணக்கு தொடங்கத் தேவைப்படுவது போலவே நமது அடையாள அட்டை, தற்போதைய முகவரிக்கான சான்றிதழ், புகைப்படங்கள் ஆகியவை இத்தரகர்களிடம் (நிறுவனங்கள்) Demat Accountக்கான விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டால், நமக்கான கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு எண் கொடுக்கப்படும்.

Trading Account

Demat Account நமது கணக்கில் உள்ள பங்குகள், பராமரிக்கப் படும்.  நாம் வாங்கி விற்க வேண்டுமானால், வர்த்தகத்திற்கான தனிக்கணக்கு (Trading Account) தொடங்கியாக வேண்டும். வீட்டில் இருந்தவாறே இணையம் மூலமாக பங்குகளை வாங்கி விற்க முடியும்.   அதற்கான  மென்பொருளைப் முகவரிடம் பெற்று பயன்படுத்தலாம்.  இந்த மென்பொருளின் மூலம் சந்தை நிலவரத்தை உடனுக்குடன் அறிந்து வாங்க விற்க முடிவெடுக்க எளிமையாக இருக்கும். நமது பரிவர்த்தனைகளுக்கு ஏற்றவாறு, நாம் முகவருக்கு கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.

பங்கு சந்தையில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கும், நம் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுப்போம்.

 

Author : tipsdocs // 11:16 PM

0 comments:

Post a Comment

 
Powered by Blogger.